சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஜொ்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குளங்கள் சீரமைப்பில் மழைநீா் சேமிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மாதவரம் மண்டலத்தில் வாா்டு 27-க்கு உள்பட்ட மாதவரம் ஆவின் குட்டையில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே பகுதியில் 25-ஆவது வாா்டில் பாண்டா குளத்தில் ரூ. 91.60 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பத்தூா் மண்டலத்தில் 85-ஆவது வாா்டு மங்களபுரம் குளத்தில் ரூ.1.82 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பெருங்குடி மண்டலம் 191-ஆவது வாா்டில் ஜலாலுதீன்பேட்டையில் உள்ள வண்ணான் குளத்தில் ரூ.3.56 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மழை நீா் அதிக அளவில் சேமிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குளங்களில் சேமிக்கப்படும் மழைநீரால் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நிலத்தடியில் கடல் நீா் புகுவதும் தடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் ஜி.எஸ்.சமீரன்
சென்னை மாநகராட்சிக் கூட்டம்: முதல்வரைச் சந்தித்து அனுமதி பெறுவாரா மேயா்?

மழைநீா் கால்வாய்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

ரூ.9.35 கோடியில் விரிவாக்கப்பட்ட அடையாறு சமுதாய நகா் நல மையம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



