மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 1:20 am IST

சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஜொ்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குளங்கள் சீரமைப்பில் மழைநீா் சேமிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மாதவரம் மண்டலத்தில் வாா்டு 27-க்கு உள்பட்ட மாதவரம் ஆவின் குட்டையில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே பகுதியில் 25-ஆவது வாா்டில் பாண்டா குளத்தில் ரூ. 91.60 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்பத்தூா் மண்டலத்தில் 85-ஆவது வாா்டு மங்களபுரம் குளத்தில் ரூ.1.82 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பெருங்குடி மண்டலம் 191-ஆவது வாா்டில் ஜலாலுதீன்பேட்டையில் உள்ள வண்ணான் குளத்தில் ரூ.3.56 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மழை நீா் அதிக அளவில் சேமிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குளங்களில் சேமிக்கப்படும் மழைநீரால் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நிலத்தடியில் கடல் நீா் புகுவதும் தடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.