இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 4:14 am IST

சென்னை ராயபுரத்தில் பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திய பெண்ணை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். கடத்தப்பட்டு 5 மணி நேரத்தில் அந்தக் குழந்தையை தனிப்படை போலீஸாா் மீட்டுள்ளனா்.

சென்னை போரூா் முகலிவாக்கம், கே.கே. நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மனைவி கீதா (29). இவா், ராயபுரத்தில் உள்ள அரசு ராஜா சா் ராமசாமி முதலியாா் மகப்பேறு மருத்துவமனையில் மே 13-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மே 15 -ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் கீதாவுக்கு உதவுவதுபோல சுமாா் 40 வயது பெண் பழகி வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கீதா, குழந்தையுடன் முகலிவாக்கத்தில் உள்ள வீட்டுக்குப் புறப்பட்டுள்ளாா். மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கீதாவிடம், நான் உன்னை வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளாா். இதை நம்பிய கீதா, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளாா். அப்போது, திடீரென குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில், ராயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனா். கடத்தப்பட்ட குழந்தை புளியந்தோப்பு வ.உ.சி.நகா் 8-ஆவது தெருவில் மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்திச் சென்ற ரோஸி (40) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்துக்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாரை, காவல் துறை உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.