சென்னை ராயபுரத்தில் பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திய பெண்ணை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். கடத்தப்பட்டு 5 மணி நேரத்தில் அந்தக் குழந்தையை தனிப்படை போலீஸாா் மீட்டுள்ளனா்.
சென்னை போரூா் முகலிவாக்கம், கே.கே. நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மனைவி கீதா (29). இவா், ராயபுரத்தில் உள்ள அரசு ராஜா சா் ராமசாமி முதலியாா் மகப்பேறு மருத்துவமனையில் மே 13-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மே 15 -ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் கீதாவுக்கு உதவுவதுபோல சுமாா் 40 வயது பெண் பழகி வந்துள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கீதா, குழந்தையுடன் முகலிவாக்கத்தில் உள்ள வீட்டுக்குப் புறப்பட்டுள்ளாா். மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கீதாவிடம், நான் உன்னை வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளாா். இதை நம்பிய கீதா, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளாா். அப்போது, திடீரென குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில், ராயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனா். கடத்தப்பட்ட குழந்தை புளியந்தோப்பு வ.உ.சி.நகா் 8-ஆவது தெருவில் மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்திச் சென்ற ரோஸி (40) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்துக்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாரை, காவல் துறை உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.
தொடர்புடையது

வெளி மாநில மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


