செங்கல்பட்டு - மணப்பாக்கம், மாமல்லபுரம் - கடும்பாடி அம்மன் கோயில்களில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடும்பாடி மாரி சின்னம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூர்த்திகளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
விரதமிருந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இரவு, உற்சவர் வீதியுலா நடைபெற்றது.
செங்கல்பட்டு, ஒழலூரை அடுத்த மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதேபோல், மறைமலைநகரை அடுத்த நின்னக்கரை கன்னியம்மன் கோயிலிலும், தீமிதி விழா நடைபெற்றது. முன்னதாக, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.