ரத்த தான தினம்: பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

ரத்த தான தினத்தையொட்டி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
ரத்த தான விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்சன்.
ரத்த தான விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்சன்.
Published on
Updated on
1 min read

ரத்த தான தினத்தையொட்டி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியருமான ஜான்சன் இப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். என்.சி.சி. முதன்மை அலுவலர் சங்கர், சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பேரணியை வழிநடத்தினர்.
இந்த பேரணி செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, பாசி தெரு, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச்சென்றது.
ரத்த தான அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விளக்கினர். இதில் என்.சி.சி. மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com