புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ரூ. 10 நாணயங்களை குறிப்பாக போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், ரேஷன் கடைகள், கூட்டுறவு வங்கிகள், வணிக, கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களிடம் மறுக்காமல் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.