உத்தரமேரூரில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்

உத்தரமேரூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
Published on
Updated on
1 min read

உத்தரமேரூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
 உத்தரமேரூர் பேரூராட்சியில் சுமார் 15,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, செய்யாற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி சார்பில், ஓங்கூர் குளம் அருகேயும், நல்லூர் திரெளபதி அம்மன் கோயில் அருகேயும், அண்ணாநகர், குப்பையநல்லூர் மற்றும் சோமநாதபுரம் சுடுகாடு அருகே உள்ள பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுக்ள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com