

மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அச்சிறுப்பாக்கம் ரோட்டரி கிளப் ஆகியவை சார்பில் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம்நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் வ.ஆராவமுதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அச்சிறுப்பாக்கம் ரோட்டரி கிளப் தலைவர் கே.ஆர்.பாலாஜி முன்னிலை வகித்தார். கிளப் செயலர் எஸ்.அப்துல் ரசாக்
வரவேற்றார். செங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவக் குழுவினர் வந்து 75 பேரிடம் ரத்தத்தை பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்ராக் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், கல்லூரி நாட்டு நலத்திட்ட அலுவலர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் செய்து இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.