இன்று குடும்ப அட்டைதாரர் குறைதீர் முகாம்

குடும்ப அட்டைதாரர்களுக்கான குறை தீர்முகாம் சனிக்கிழமை ( டிச. 8) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில்


குடும்ப அட்டைதாரர்களுக்கான குறை தீர்முகாம் சனிக்கிழமை ( டிச. 8) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் நடைபெறவுள்ளது.
உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் உள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், அந்தந்த வட்டங்களில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம். மேலும், மின்னனு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படவுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம்-நீர்வள்ளூர் (9445000169), ஸ்ரீபெரும்புதூர்-கொளத்தூர் (9445000170), உத்தரமேரூர்-குன்னவாக்கம் (9445000171),செங்கல்பட்டு-அம்மணம்பாக்கம் (9445000172), திருக்கழுகுன்றம்-முள்ளிகொளத்தூர் (9445000173), திருப்போரூர்-மாம்பாக்கம் (8838330697), மதுராந்தகம்-பழமுத்தூர் (9445000174), செய்யூர்-வெடால் (9445000175), வாலாஜாபாத்-புத்தாகரம் (9952912646) ஆகிய 9 வட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் குறைதீர்முகாம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு, பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com