குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் குடிநீர் சரிவர வராததால், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலிக் குடங்களுடன்

பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் குடிநீர் சரிவர வராததால், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலிக் குடங்களுடன் மதுராந்தகம்-உத்தரமேரூர் சாலையில் சனிக்கிழமை காலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தண்டலம் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அனுப்பி இருந்தனர். எனினும், அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 எனவே, அப்பகுதி மக்கள் கடந்த 15 நாள்களுக்கு முன் குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
 எனினும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டிக்கும் வகையில், 50க்கும் மேற்பட்டபொது மக்கள் சனிக்கிழமை காலையில் காலிக் குடங்களுடன் மதுராந்தகம்-உத்தரமேரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது உத்திரமேரூர் செல்ல இருந்த நகர பேருந்தையும் அவர்கள் சிறை பிடித்தனர்.
 இது பற்றி தகவல் அறிந்து பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் கோதண்டராமன் அங்கு வந்தார். அவசர அவசியம் கருதி குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு 10 நிமிடத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com