காஞ்சிபுரத்திலிருந்து வெளியூர்களுக்கு புதிய பேருந்துகள்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகளை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகளை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
 தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட புதிய பேருந்துகளின் இயக்கத்தை அவர் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்கும், மதுரைக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, விழுப்புரம் கோட்டத்துக்கு புதிய பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில், காஞ்சிபுரத்திலிருந்து மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்துகளின் தொடங்கியுள்ளது.
 இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், எம்எல்ஏ எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சோமசுந்தரம், மைதிலி, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com