செங்கல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 18-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் கந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பில், காவல் ஆய்வாளர்கள் அந்தோணி ஸ்டாலின், இளங்கோவன், போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்பாபு , உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், ரவி, சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, மேட்டுத் தெரு, தர்மராஜாகோயில் தெரு வழியாக வந்து ஜிஎஸ்டி சாலை அருகே நிறைவு பெற்றது.
மாமல்லபுரத்தில்...
மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் மாமல்லபுரம் ரவிக்குமார், திருக்கழுகுன்றம் அய்யனார் அப்பன், தாழம்பூர் பழனி, உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, முத்துக்குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, கங்கை கொண்டான் மண்டபம், பேருந்துநிலையம் வழியாகச் சென்று கடற்கரை சாலை அருகே நிறைவு பெற்றது.
செங்கல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 18-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் கந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பில், காவல் ஆய்வாளர்கள் அந்தோணி ஸ்டாலின், இளங்கோவன், போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்பாபு , உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், ரவி, சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, மேட்டுத் தெரு, தர்மராஜாகோயில் தெரு வழியாக வந்து ஜிஎஸ்டி சாலை அருகே நிறைவு பெற்றது.
மாமல்லபுரத்தில்...
மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் மாமல்லபுரம் ரவிக்குமார், திருக்கழுகுன்றம் அய்யனார் அப்பன், தாழம்பூர் பழனி, உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, முத்துக்குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, கங்கை கொண்டான் மண்டபம், பேருந்துநிலையம் வழியாகச் சென்று கடற்கரை சாலை அருகே நிறைவு பெற்றது.