காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் கடலூர் கிராம மீனவக் குப்பங்களில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.
அவர் லத்தூர் ஒன்றியம், கடலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிக்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய மீனவக் குப்பங்களிலும், கடலூர் கிராமத்திலும் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் லத்தூர் ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.ராஜு, அதிமுக முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி, நாராயணன், மணி, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக காத்தான்கடை அருகே வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.