மாமல்லபுரம் மீனவர்கள் வலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கின 

மாமல்லபுரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வீசிய வலையில் சனிக்கிழமை ரூ.50ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ளன.

மாமல்லபுரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வீசிய வலையில் சனிக்கிழமை ரூ.50ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ளன.
 ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடித் தடைக்கால உத்தரவை அரசு பிறப்பிக்கும்போது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல், படகுகள், விசைப்படகுகள், மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com