காஞ்சிபுரம் அருகேயுள்ள உக்கம்பெரும்பாக்கத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோயிலாகவும் உள்ளது. இங்குள்ள விருட்ச விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேசுவர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கோ பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடந்தன. பின்னர் விருட்ச விநாயகருக்கு 108 சங்காபிஷேகமும், நவகலச அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடந்தன.
சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பின் விநாயகர் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.