தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், சின்னக் காஞ்சிபுரம் அரசு ஆடவர் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பள்ளிகள் சார்பில் 75 பேரும், கல்லூரிகள் சார்பில் 80 பேரும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ.7ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பவானி மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் என்.பழனிராஜ் (பொறுப்பு) ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.