திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை கலசபூஜை, கலசாபிஷேகம், பட்டுப் புடவை அலங்காரம், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணத்துடன் பல்வேறு மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வேதமலை வல இருமுடிபெருவிழாக்குழுவினர் மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினர் செய்து வருகின்றனர்.