ஆக.16-ல் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கலசாபிஷேகம்

திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
ஆக.16-ல் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கலசாபிஷேகம்


திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இக்கோயிலில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை கலசபூஜை, கலசாபிஷேகம், பட்டுப் புடவை அலங்காரம், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணத்துடன் பல்வேறு மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும்  நடைபெறவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை வேதமலை வல இருமுடிபெருவிழாக்குழுவினர் மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com