உத்தரமேரூர் தாலுகாவுக்கு உள்பட்ட மானாம்பதி, பெருநகர் ஆகிய இரு கிராமங்களில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளை உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுகாவுக்கு உள்பட்ட மானாம்பதி,பெருநகர் ஆகிய இரு இடங்களிலும் உத்தரமேரூர் சட்டப் பேரவை உறுப்பினர் க.சுந்தர் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, இரு கிராமங்களிலும் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளை அவர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் .
இதில், உத்தரமேரூர் ஒன்றிய திமுக செயலர் ஞானசேகரன், நிர்வாகிகள் மானாம்பதி சுந்தர்ராஜன், பெருநகர் வடிவேலு, சாலவாக்கம் ஒன்றியச் செயலர் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.