அச்சிறுப்பாக்கத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
அச்சிறுப்பாக்கம் சுன்னத் வல் ஜமாத் ஜூம்மா பள்ளி வாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி, தலைமை இமாம் மௌலானா அப்துல் ரகுமான் மன்பா தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காஞ்சி மாவட்டத் தலைவர் எம்.ஷாஜஹான், நிர்வாகிகள் அலாவுதீன், எஸ்.உசேன், கலிமுல்லா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தொழுகைக்குப் பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.