செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தலைவர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். இயக்குநர் பி.ஜி.ஆச்சார்யா , பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழுமத்தின் இயக்குநர் வினோத் சிங்வி, இன்போசிஸ் மகேந்திரா சிட்டி வேர்ல்டு, விநியோக மேலாளர் பிரியா சதீஷ்தேவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .
இதனைத் தொடர்ந்து வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 55 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
பேரவைத்தலைவராக மாணவி ம.பிரியதர்ஷினி, துணைப்பேரவை தலைவராக உ. ஜவகர் நிஷா, பொதுச்செயலாளராக வ.மகாலட்சுமி, துணை செயலாளராக உ. ஜீஷி பரக்கத், பொருளாளராக ப.ஷண்முகபிரியா, துணைப்பொறுப்பாளர் அமுதா ஆகியோர் பொறுப்பேற்றனர். கல்லூரி முதல்வர் சி.ஷாலினி நன்றி கூறினார்.