காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலும், செங்கல்பட்டிலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்பட்டு வருவதாக ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வாலாஜாபாத் அருகே வல்லம்பாக்கம் கிராமத்திலும், செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையிலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 மதுபானக் கூடங்களில் இருந்து மொத்தம் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு போலீஸார் இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.