கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம்  வியாழக்கிழமை  நிறைவடைந்தது. 


மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம்  வியாழக்கிழமை  நிறைவடைந்தது. 
 மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அரங்கில், முன்னதாக செவ்வாய்க்கிழமை இந்த முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் வரவேற்றார்.   அண்ணா  மேலாண்மை பயிற்சி நிலைய  இயக்குநர்  வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குநர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com