மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு விளக்கக் கூட்டம்

தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக அக்கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு விளக்கக் கூட்டம்


தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக அக்கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் புதிய கட்டமைப்பு விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாயக்கூடத்தில் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் அவர் பேசியது:  
மக்கள் நீதி மய்யத்தில் தமிழகம் முழுவதும் 11 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். 
கட்சி தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதைப் போல வரும் ஆண்டுகளில் கட்சியை சிறப்பாக வழிநடத்தவும், நகராட்சிகளில் வார்டுகள் உள்பட குக்கிராமங்களிலும்  உறுப்பினர்கள்  சேர்க்கும்  பணியைத்  தீவிரமாக்கி  இருக்கிறோம். 
இதற்காக கட்சியில் வலுவானக் கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்து அதற்கேற்ப ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்டமைப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறோம்.
எங்கள் இலக்கு உள்ளாட்சித் தேர்தல் என்பதை விட வருகிற சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்தே செயல்பட்டு வருகிறோம் என்றார் அவர்.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர்கள் மௌரியா (அமைப்பு), உமா தேவி (சார்பு அணிகள்), ஆர்.ரங்கராஜன்(கொள்கைப் பரப்பு), பஷீர் அகமது (தலைமை நிலையம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்  தீனதயாளன் (மேற்கு), எஸ்.அண்ணாமலை(மத்தியம்), என்.ஆர்.ராஜீவ்குமார் (கிழக்கு), பி.கே.மணிவண்ணன்(வடக்கு), ராஜேந்திரன்(தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com