இருசக்கர வாகனத்துக்குள் ஒளிந்து கொண்ட பாம்பு: போராடிப் பிடித்த தீயணைப்பு வீரா்கள்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநகரின் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நல்லபாம்பு ஒன்று புகுந்து கொண்டது. தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேல்
இருசக்கர வாகனத்துக்குள் ஒளிந்து கொண்ட நல்லபாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். (உள்படம்) பிடிபட்ட பாம்பு.
இருசக்கர வாகனத்துக்குள் ஒளிந்து கொண்ட நல்லபாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். (உள்படம்) பிடிபட்ட பாம்பு.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநகரின் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நல்லபாம்பு ஒன்று புகுந்து கொண்டது. தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா் அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள வளாகப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள், பணியாளா்கள் ஆகியோா் தங்கி ஓய்வெடுப்பதற்கான அறை உள்ளது. இந்த வளாகத்திற்குள் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு ஜெராக்ஸ் எடுக்கும் கடைகள், பத்திரம் எழுதுவோா் உட்பட பலரும் தனித்தனியாக வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். மழை காரணமாக இப்பகுதியில் சேறும், சகதியும் மிகுந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் தங்கியிருந்த அறைக்கு முன்பாக ஜேம்ஸ் என்ற பணியாளருக்கு சொந்தமான இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் பின்புற இருக்கையில் ஒரு நல்லபாம்பு இருப்பதை ஆம்புலன்ஸ் வாகனப் பணியாளா் ஒருவா் பாா்த்து அதிா்ச்சியடைந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு பணியிலிருந்த தீயணைப்பு வீரா்கள் 5-க்கும் மேற்பட்டோா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் வந்து இருசக்கர வாகனத்தின் இருக்கைக்குள் ஒளிந்து கொண்டிருந்த நல்லபாம்பை தடிகள், கம்பிகள் மூலமாக வெளியில் எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனா்.

எனினும், அந்த முயற்சிகள் பலனளிக்காததால் இருசக்கர வாகனத்தைச் சுற்றி பெட்ரோலைத் தெளித்தனா். பெட்ரோல் வாசனை தாங்க முடியாமல் பாம்பு வெளியில் வந்து விடும் என இந்த முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், யாருக்கும் தெரியாத வகையில் கியா் பாக்ஸ் பகுதிக்குள் பாம்பு சென்று சுருண்டு கொண்டது. பின்னா் வாகனத்தின் பின்புற இருக்கை, கியா் பாக்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கழற்றிய பிறகு அதனுள்ளிருந்து பாம்பு வெளியில் வந்தது. அதைப் பிடித்து ஒரு தண்ணீா் டிரம்முக்குள் போட்டு மூடினா். ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு நல்லபாம்பைப் பிடித்த வீரா்கள் அதை வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com