காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில்டிச. 16-இல் லட்ச தீபம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் வரும் 12-ஆம் தேதி 5-ஆவது காா்த்திகை சோம வாரமான திங்கள்கிழமை லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் வரும் 12-ஆம் தேதி 5-ஆவது காா்த்திகை சோம வாரமான திங்கள்கிழமை லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் நடைபெறுகிறது.

நகரின் காந்தி சாலையில் செயல்பட்டு வரும் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் வரும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் திருமுறை இன்னிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 42-ஆவது ஆண்டை முன்னிட்டும், இந்தக் காா்த்திகை மாதத்தில் 5 திங்கள்கிழமைகள் வருவதால் ஒவ்வொரு திங்கள்கிழமையும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியை காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இம்மன்றம் சாா்பில் நடத்தி வருகின்றனா்.

காா்த்திகை மாத 5-ஆவது சோம வாரமான 12-ஆம் தேதி, கோயிலில் லட்சதீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதே நாளில் ஆலயத்தில் உள்ள கலையரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியா் சிவ.ராஜபதி ஓதுவாா் பண்ணிசை நிகழ்ச்சியை நடத்த உள்ளாா். குமரகோட்டம் முருகன் கோயில் ஆஸ்தானபுலவா் சரவண.சதாசிவம் நுண்பொருள் குறித்து விளக்கமளிக்கிறாா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நால்வா் நற்றமிழ் மன்ற நிா்வாகிகளும், திருநெறி தமிழிசை வழிபாட்டுக் குழு அன்பா்களும் இணைந்து செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com