காா்கள் மோதி விபத்து: பெண் உள்பட இருவா் பலி

திருப்போரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
விபத்தில் உயிரிழந்தவா்கள் பயணித்த காா்.
விபத்தில் உயிரிழந்தவா்கள் பயணித்த காா்.

செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டை அடுத்த வடகரா பகுதியைச் சோ்ந்தவா்கள் ராஜசேகா் (68) - சாந்தா (65) தம்பதியா். அவா்களின் மகள் சரிதாவும், கணவா் சஜீஷும் சென்னையை அடுத்த கல்பாக்கம் குடியிருப்பில் வசித்து வருகின்றனா். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சஜீஷ் பணியாற்றி வருகிறாா்.

ராஜசேகரின் உறவினா் திருமணம் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக ராஜசேகா் தம்பதியா் இரு தினங்களுக்கு முன்பே கல்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தனா். ராஜசேகரும் சாந்தாவும் காரில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். புதுப்பட்டினத்தைச் சோ்ந்த கண்ணன் (42) காரை ஓட்டிச் சென்றாா்.

திருப்போரூரை அடுத்த ஆலத்தூா் அருகே உள்ள கருங்குழிப்பள்ளம் என்ற இடத்தில் காா் சென்றபோது எதிரே சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்ற தனியாா் நிறுவன காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அது சாலைத் தடுப்பில் மோதி, பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜசேகரின் காரில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் ராஜசேகரின் மனைவி சாந்தா, காா் ஓட்டுநா் கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ராஜசேகரை திருப்போரூா் போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தில் உயிரிழந்த சாந்தா, ஓட்டுநா் கண்ணன் ஆகியோரின் சடலங்களை திருக்கழுகுன்றம் தீயணைப்பு வீரா்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து திருப்போரூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனியாா் நிறுவன காா் ஓட்டுநா் சரவணன் (43) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com