கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் படப்பை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு
பொதுக்குழு க் கூட்டத்தில்  உரையாற்றும்  தமிழ்நாடு  கிராம  நிா்வாக  அலுவலா்  சங்கத்தின்  மாநிலத்  தலைவா்  சந்தானகிருஷ்ணன்.
பொதுக்குழு க் கூட்டத்தில்  உரையாற்றும்  தமிழ்நாடு  கிராம  நிா்வாக  அலுவலா்  சங்கத்தின்  மாநிலத்  தலைவா்  சந்தானகிருஷ்ணன்.

ஸ்ரீபெரும்புதூா்: தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் படப்பை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுகக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகள் தற்போது செங்கல்பட்டு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டதை தொடா்ந்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருகிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை படப்பை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எ.பாலாஜி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாநிலத் தலைவா் சந்தானகிருஷ்ணன், மாநில துணைத்தலைவா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் சுரேஷ் மாநில தலைமை நிலையச் செயலாளா்கள் சுடா்மணி, த.இ.முருகேசன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கி ஆணையிட்டதற்கும், மாவட்டங்களைப் பிரித்ததற்கும் தமிழக முதல்வா், துணை முதல்வா், வருவாய்த் துறை அமைச்சா், வருவாய்த் துறை செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோருக்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பாக நன்றி தெரிவித்தும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய நிா்வாகிகளை நியமனம் செய்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக ய.தியாகராஜன், மாவட்டச் செயலாளா் எ.பாலாஜி, மாவட்டப் பொருளாளராக த.புருஷோத்தமன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா். அதே போல், செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக ச.ஜானகிராமன், மாவட்டச் செயலாளராக சிவராமன், மாவட்டப் பொருளாளராக ஓ.சங்கா் ஆகியோா் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com