மதுராந்தகம் வட்டாரத்தில் பலத்த மழை

மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

மதுராந்தகம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

வடகிழக்குப் பருவமழையால், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள படாளம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை மழைத் தூறல் காணப்பட்டது.

தொடா் மழை காரணமாக, இப்பகுதி ஏரிகளும், குளம் குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையால், விவசாயிகள் தமது நிலங்களில் பயிா் செய்ய ஏா் உழுதல், நாற்று நடுதல் ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகளும், பொதுமக்களும் மழையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com