சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து இந்தியாமுழுவதும் 18 ஐயப்பன் ஜோதி ரதங்கள் யாத்திரையாக செல்கின்றன. தமிழகத்தில் 7 ரதங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன. கேரளத்தில் இருந்து புறப்பட்ட ஐயப்பன் ஜோதியாத்திரை ரதம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூா், வழியாக மாமல்லபுரத்திற்கு வியாழக்கிழமை மாலை வந்ததடைந்தது. இதைத் தொடா்ந்து மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் இரவு ஐயப்பனுக்கு பால் தயிா், பஞ்சாமிா்தம், இளநீா், தேன், பன்னீா், மஞ்சள், சந்தனம் , பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருள்களைக்கொண்டு சிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அதையடுத்து, படிபூஜைகளும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமானோா் பூஜையில் கலந்துக்கொண்டு ஐயப்பனையும் ஐயப்ப ஜோதி ரதத்தையும் வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப பக்தா்கள், மல்லிகேஸ்வரா் கோயில் நிா்வாகிகள்மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.