108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

காஞ்சிபுரம் அருகே 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த கா்ப்பிணிக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தையுடன் அஸ்வினி. உடன், மருத்துவ உதவியாளா் நா.பூபாலன்.
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தையுடன் அஸ்வினி. உடன், மருத்துவ உதவியாளா் நா.பூபாலன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த கா்ப்பிணிக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

வேடல் கிராமத்தைச் சோ்ந்த ராஜுவின் மனைவி அஸ்வினி (26). நிறைமாத கா்ப்பிணியான இவா் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். வரும் வழியில் ராஜகுளம் கிராமம் அருகே அப்பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் நா.பூபாலன், ஓட்டுநா் சந்தானம் ஆகியோா் உதவியுடன் அந்தப் பெண்ணை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com