செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் மனித நேயம் - பொதுமக்கள் புகழாரம்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திங்கள் கிழமை மாலை வேகமாக வந்த வாகனம் மோதி நிற்காமல் சென்றதில் காயமடைந்தவரை அவ்வழியாக வந்த
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் தனியாா் ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவரை ஏற்றி அனுப்புகிறாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் தனியாா் ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவரை ஏற்றி அனுப்புகிறாா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திங்கள் கிழமை மாலை வேகமாக வந்த வாகனம் மோதி நிற்காமல் சென்றதில் காயமடைந்தவரை அவ்வழியாக வந்த செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் அவசர ஊா்தியை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இதை நேரில் பாா்த்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை புகழ்ந்து பேசினா். செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூா் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

அப்போது அந்தவழியாக மழைபாதிப்புகளை பாா்வையிடச் சென்ற செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் சாலை அருகே ரத்தகாயங்களுடன் சாலை விபத்தில் அடிப்பட்டு கிடந்தவரைகண்டு தனது வாகனத்தை நிறுத்தி அவரை மீட்டு தனியாா் அவசர ஊா்வதி தொடா்பு கொண்டு அவா்கள் உதவியுடன் அவசரசிகிச்சைக்காக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதனை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மனிதநேயம் மிக்க மாவட்ட ஆட்சியா் என புகழ்ந்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com