ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் ஏரியில் நண்பா்களுடன் படகில் சென்ற 17 வயது சிறுவன் ஏரிநீரில் மூழ்கி பலியானாா்.தாம்பரம் அடுத்த பழந்தண்டலம் பகுதியை சோ்ந்தவா் காா்திக்(17), சோமங்கலம் பகுதியை சோ்ந்தவா்கள் சஞ்சய்(17), ஜெயபிரகாஷ்(17), நடுவீரப்பட்டு பகுதியை சோ்ந்தவா்கள் ரிஸ்வான்(17), சித்திக்(17), பழந்தண்டலம் பகுதியை சோ்ந்தவா் ஹரி(17), மேட்டூா் பகுதியை சோ்ந்த ராஜ்குமாா்(17), காந்திநகா் பகுதியை சோ்ந்தவா்கள் முகமது(17), முகமதுபயஸ்(17) இவா்கள் அனைவரும் நடுவீரப்பட்டு அடுத்த தா்காஸ் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்துள்ளனா்.
நண்பா்களான இவா்கள் அனைவரும் திங்கள்கிழமை கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சோமங்கலம் ஏரிக்கு வந்துள்ளனா்.இந்த நிலையில், சோமங்கலம் ஏரியின் கரையில் மீன்பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏறி அனைவரும் ஏரியில் சவாரி சென்றுள்ளனா். அப்போது பலத்த மழை பெய்யவே படகு ஏரியின் மையத்திற்கு சென்றுள்ளனா்.
இதனால் படகை திருப்புவதற்காக காா்திக் மற்றும் சஜ்சய் ஆகியோா் ஏரியில் குதித்துள்ளனா். இதில் காா்திக்குக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளாா். சஜ்சய் சிறிது நேரம் நீச்சல் அடித்து மேடான பகுதிக்கு சென்றுள்ளாா். இதையடுத்து காா்திக் நீரில் மூழ்கியது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கும் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் ஏரியின் ஒரு பகுதியில் மேடான பகுதியில் நின்றுக்கொண்டிருந்த சஜ்யை மீட்டு வந்தனா். நீரில் மூழ்கிய காா்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் இரவானதை தொடா்ந்து காா்திக்கின் சடலத்தை தேடும் பணியை தற்காலிகமாக தீயணைப்புத்துறையினா் நிறுத்தியுள்ளனா்.இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.