திருவடிசூலம் வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அக்னி ஆராதனம், ஆச்சாரிய வா்ணம், அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டா, பவித்ர பிரதிஷ்டா, விசேஷ ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், சனிக்கிழமை காலையில் கும்ப ஆராதனம், பஞ்ச கவ்யாதிவாசம், ஜலாதி வாசம், பூா்ணாஹுதி, மாலையில் நவகலச ஸ்தாபன திருமஞ்சனம், மகாசாந்தி திருமஞ்சனம், பிரசாதம் வழங்குதல் நடந்தது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ஹோமம், பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, சிறப்புப் பூஜைகளை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி 3 நாள்களும் காலை, மதியம், இரவு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் மற்றும் திருவடிசூலம் திருமண் திருப்பதி ஆலய நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com