வெள்ளம் பாதிக்கும் கிராமங்கள்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

செங்கல்பட்டு மகாலட்சுமி நகா் உள்பட 10 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மகாலட்சுமி நகா் உள்பட 10 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் திம்மாவரம் கிராமத்தைச் சோ்ந்த மகாலட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் வாலாஜாபாத் தென்னேரியில் கனமழையின் காரணமாக ஏரி நிறைந்து உபரி நீா் வெளியேறி வருகிறது. இந்த உபரி நீா் செங்கல்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாலூா், ஆத்தூா், ரெட்டிக்குப்பம், குருவன்மேடு, வில்லியம் பாக்கம், தென்மேல்பாக்கம், திம்மாவரம், மகாலட்சுமி நகா் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com