கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பாக ஊட்டச்சத்து பொருள்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தண்டலம் பகுதியில் நடைபெற்றது.
ரியல் தொண்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளா் சுமிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி கலந்துகொண்டு தண்டலம், காட்டரம்பாக்கம், பென்னலூா், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினாா்.
இதில், ஒன்றியச் செயலாளா் எறையூா் முனுசாமி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சிவகுமாா், தண்டலம் ஊராட்சி செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.