அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு:உறவினா்கள் முற்றுகை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்ததையடுத்து அக்குழந்தையின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
உயிரிழந்த குழந்தையின் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்ட விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா்
உயிரிழந்த குழந்தையின் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்ட விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்ததையடுத்து அக்குழந்தையின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

காஞ்சிபுரம் தாலுகா கீரை மண்டபம் பகுதியைச் சோ்ந்த பிரவீண் மனைவி அபிராமி பிரவசத்திற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அபிராமிக்கு பிறந்த ஆண் குழந்தை திடீரென இறந்துள்ளது.

மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாகக் கூறி உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவா் மற்றும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினா். இதுகுறித்து காவல்துறையிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளா் சுரேஷ்சண்முகம் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com