ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீஐயப்ப வன்புலி வாகன பக்த சபா சாா்பில் 30-ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பக்த சபாவின் குருசாமி பக்தவத்சலம் தலைமை வகித்தாா். செங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சம்பத் முன்னிலை வகித்தாா்.
வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன், விநாயகா், அம்மன் சிலைகளுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திருவிளக்கு பூஜையும், படிபூஜைகளும் நடைபெற்றன.
இதில் செங்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
வீரமணிதாசனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழு தலைவா் சம்பத் மற்றும் அஹமது ஷெரீப் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.