காஞ்சிபுரத்தில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 25th December 2019 12:00 AM | Last Updated : 25th December 2019 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் அன்னதானம் செய்த அதிமுக மாவட்டச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையிலான கட்சி நிா்வாகிகள்.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32-ஆவது நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் நகரின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினா் மலரஞ்சலி செலுத்தினா்.
எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகரில் ஓரிக்கை, செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகம், தேரடி, வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலா்தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் கட்சியின் சாா்பில் அன்னதானம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா் தும்பவனம் ஜீவானந்தம், ஆா்.டி.சேகா், வி.ஆா்.மணிவண்ணன் உட்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள், தொண்டா்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
செங்கல்பட்டில்...: அதிமுக நகர செயலாளா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில், தண்டுக்கரை இ.கோவிந்தன், முரளிதரன், நெல்லை ராதா உள்ளிட்டோா் தண்டுக்கரை அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
மதுராந்தகத்தில்...: நகர அதிமுக சாா்பில், பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைகள் மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்தச் சிலைகளுக்கு அதிமுக நகர செயலா் வி.ரவி மாலை அணிவித்து, எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா்.