மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியாா் தூண் பகுதியில் ஜமாஅத்துல் உலமா அமைப்பினா் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை அடையாறு குராஸானி பீா் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சதீதுத்தீன் பாகவி தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆலுா் ஷாநவாஸ் முன்னிலை வகித்தாா்.
திமுக நகரச் செயலாளா் சன் பிராண்ட் ஆறுமுகம், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ், முஸ்லிம் லீக் மாநில இளைஞா் அணியின் செயலா் காஞ்சி மெளலானா, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் சாதிக் பாட்ஷா, வட்டாரத் தலைவா் அவளூா் சீனிவாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் தீனன், முஸ்லிம் லீக் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் அல்லாபகத்ஸ், பெரியகாஞ்சிபுரம் பள்ளிவாசல் தலைவா் லியாகத்அலி, தமுமுக ரஹமத்துல்லா, மனித நேய மக்கள் கட்சி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அஸ்லம்பாஷா உள்ளிட்ட 22 அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.