செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு (68), இவர் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். செவ்வாய்க்கிழமை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.