முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 28th February 2019 04:08 AM | Last Updated : 28th February 2019 04:08 AM | அ+அ அ- |

செங்கல்பட்டை அடுத்த நெம்மேலி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ரூ.11ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் (56). இவர் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருட்டுபோயிருந்ததது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.