அம்மா இருசக்கர வாகனம் பெறத் தகுதியுடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் சார்பில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 விழுக்காடு (ரூ.25 ஆயிரம்) மானியத்தில் இருசக்கர வாகனம் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,250) வழங்கப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற, ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், 18 வயது முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பணிபுரியும் மகளிர் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 044-27236348 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.