பட்டு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி திமுகவினர் மனு

பட்டு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, கைத்தறித் துணி நூல் துறை


பட்டு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, கைத்தறித் துணி நூல் துறை அதிகாரியிடம் திமுகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் அதன் உறுப்பினர்கள் அண்மையில் முறைகேடு புகார் அளித்து போராட்டம் நடத்தினர். 
அதுபோல், முருகன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களிலும் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்பேரில், உரிய விசாரணை நடத்த வேண்டும், நெசவாளர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு மாவட்டச் செயலரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர் தலைமையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்டோர் கைத்தறி துணிநூல் துறை இணை இயக்குநர் செல்வத்திடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர். மாவட்ட,நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com