தீக்குளித்த தொழிலாளி சாவு: மனைவி, மகன் காயம்

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கட்டடத் தொழிலாளி இறந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கட்டடத் தொழிலாளி இறந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 காஞ்சிபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் வசித்தவர் மூர்த்தி (37). கட்டடத் தொழிலாளியான அவருக்கு மனைவி சத்யா (30), மகன் சந்துரு (9) ஆகியோர் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதிக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், மூர்த்தி மனமுடைந்து வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவரது மனைவி மற்றும் மகனை அணைத்து தீயை பரவச் செய்தததாகத் தெரிகிறது. இதில், மூர்த்தி அதிக தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 சத்யாவும், சந்துருவும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதுகுறித்து கிராமிய போலீஸாருக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் அப்பகுதயினர் தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இறந்த மூர்த்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி, மகனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com