ரூ. 2 லட்சம் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை மதுராந்தகம் மதுவிலக்கு


மதுராந்தகம் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோழியாளம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, இப்பகுதியில் கூடுதல் விலையில் விற்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. அதன்படி, அந்த மதுபாட்டில்களை கொண்டுவந்து, கோழியாளம் வனப் பகுதியில் மறைத்து வைத்திருந்தார். இதுகுறித்து அறிந்த மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸார் புதன்கிழமை காலை அப்பகுதியில் திடீர் சோதனையிட்டனர். அங்கு, சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2,000 வெளிமாநில மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர். 
அப்போது போலீஸாரைக் கண்ட அலெக்ஸ் தப்பியோடி விட்டார். இதையடுத்து, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையிலான போலீஸார், அங்கிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com