அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜே.தாமஸ் தலைமை வகித்தார். திருக்கழுகுன்றம் ஒன்றியத் தலைவர் வி.கீதா வரவேற்றார். மாவட்டச் செயலர் து.மூர்த்தி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.காமராஜ் வரவு செலவு திட்டத்தை விளக்கினார். மாநிலச் செயலர் பி.எல்.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அங்கன்வாடியில் 20 முதல் 25 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 உடன் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 தொடர்ந்து, இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும், சுமார் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அதை முதலமைச்சர் மற்றும் சமூக நலத்துறைக்கு அனுப்புவது என்றும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுகுன்றம், சூனாம்பேடு, சித்தாமூர், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் என்.தேவி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com