சிறுமி தற்கொலை

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் தந்தை கண்டித்ததால் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் தந்தை கண்டித்ததால் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர் கிராமம், புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகள் ஏஞ்சல் (15). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் திங்கள்கிழமை இரவு செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தந்தை கண்டித்தார். 
இதனால் மனமுடைந்த ஏஞ்சல் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏஞ்சல் இறந்தார். இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com