செங்கல்பட்டு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வயிற்றுவலி காரணமாக புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு அண்ணாசாலையைச் சேர்ந்த பாஸ்கர் மகள் திவ்யா (18). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார். வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதைக்கண்ட உறவினர்கள் திவ்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.