குழந்தையுடன் தாய் மாயம்

மாமல்லபுரத்தில் குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


மாமல்லபுரத்தில் குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
மாமல்லபுரத்தை அடுத்த பண்டிதமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி லோகநாயகி (33). இவர்களுக்கு தர்ஷன் (10) என்ற மகனும், மித்ரா(5) என்ற மகளும் உள்ளனர்.   குழந்தைகள் இருவரும் மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். 
சில தினங்களுக்கு முன் திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருவதாக கூறி விட்டு மகள் மித்ராவுடன் சென்ற லோகநாயகி வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 
அவரது கணவரும், உறவினர்களும் எங்கு தேடியும் கிடைக்காததால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் ஆய்வாளர் ரவிக்குமார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com