பெண்ணிடம் 10 சவரன் சங்கிலி பறிப்பு

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.


கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (31). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வைஷ்ணவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
இதுகுறித்து வைஷ்ணவி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com