செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் ஒடிஸா இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் பண்டா (22). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்துவந்தார். குடும்பப் பிரச்னை காரணமாக இவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.